அரசு ஊழியர்கள் வரும் 28,29 ஆம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 28 மற்றும்29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்துக்கு தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் வரும் 28,29 ஆம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், மார்ச் 28, 29ல் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்த செய்யப்படும் என்றும் 28, 29 தேதிகளில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்களை துறைவாரியாக அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post