தமிழக கோவில்களில் திருடப்பட்ட 2 சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாகை திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோவிலில் திருடப்பட்ட தேவி, விநாயகர் சிலையை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்விரு சிலைகளும் 1970-ஆம் ஆண்டு காலகட்டத்தில் விற்பனை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சிலை கடத்தல் மன்னன் சுபாஷுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு சிலைகளையும் அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.