பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும் சூழ்நிலையில், ஆளுநர் ஆர். என்.ரவியை கண்டித்து சென்னை தேனாம்பேட்டை ,அண்ணா சாலை, மற்றும் அறிவாலயம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ஆட்டுக்கு தாடியும், தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவுயும் எதற்கு?”, ‘#DictatorRavi’ ‘#GetOutRavi’ என திமுக பிரமுகர் வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சென்னை முழுவதும் பரபரப்பு போஸ்டர் அடித்து ஒட்டிள்ளார்.
ஏற்கனவே சென்னையில் இதேபோல் சென்னை முழுவதும் #GetOutRavi என போஸ்டரை அடித்து ஒட்டியவர் இவர்தான் எனக்கூறப்படுகிறது.