16 வகையான செல்வங்கள் கிடைக்க..!! திருவோண விரதம் முக்கியம்..!!
ஒவ்வொரு மாதமும் பெருமாளுக்கென்று திருவோணம் வரும். இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் 16 வகையான செல்வங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவோணம் பெருமாளுக்கு மிக முக்கியமான நாள், இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட சந்திர தோஷங்கள் நீங்கும்.
பெருமாள் மந்திரம், விஷ்ணு மந்திரம், சகஸ்ரநாமம் படித்தால் சிறந்த பலன் கொடுக்கும். இந்த நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாத்தி வழிபட்டால் மன நிம்மதியான வாழ்வு கிடைக்கும். கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாத பக்தர்கள், வீட்டிலேயே விளக்கு ஏற்றி விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
மாதந்தோறும் இந்த திருவோண நட்சத்திர நாள் வரும், இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று துளசி மாலை சாத்தி வணங்கி வந்தால், ஏழு பிறவி பிறப்பதற்கான வரனும், கல்வி, செல்வம், பெயர், புகழ்,. நிம்மதியான வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, கடன் இல்லா வாழ்க்கை.., உட்பட 17 வரன்கள் கிடைக்கும் என்று ஆன்மீக ஐதீகம் சொல்லுகிறது.
தொடர்ந்து விரதம் இருக்க முடியாதவர்கள் 9 வாரங்கள் இருந்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்று பலரும் சொல்லுகின்றனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்