இனி “சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடக்கும்” அன்பில் மகேஷ் அறிக்கை..!!
சென்னை செயின்ட் தாமஸ் மெளண்டில் உள்ள மான் ஃபோர்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 2ம் ஆண்டு தகரி சிலம்பாட்ட கழக போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை பள்ளி கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்டு பேசிய அவர், சிலம்பாட்டம் என்பது நம் தமிழ் இனத்தின் கலச்சாரம், பண்பாடு மற்றும் நம் அடையாளம் இது போன்ற பல கலை நிகழ்ச்சிகளை அழித்து விடாமல் தொடர்ந்து நடத்துவதற்கு நன்றி. மிகவும் பாராட்டிற்குறிய ஒரு விஷயம் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் பணியமர்த்த படுகிறார்கள். பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் ஒரு பாடம் எடுத்து முடிப்பதற்கு 4மணி நேரம் நேரம் ஆகும் அதற்கு பின் அவர்கள் எழுதப்படும் தேர்வுகள் என அதிகம் இருக்கிறது. இதனால் பாடச்சுமை ஏற்படும். ஆசிரியர்களுக்கும் பயிற்சி பாதிப்பு ஏற்படாத வகையில், “சனிக்கிழமை களிலும் வகுப்புகள் நடத்த” திட்டம் வைத்துள்ளோம். விரைவில் அது அமலுக்கு வரும். என செய்தியாளர்களை சந்தித்த, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்..