ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ரூ.1.40 கோடி மோசடி செய்த 1 பெண் உட்பட 4 நபர்கள் கைது. ரொக்கம் ரூ.1.01 கோடி & 2 Fortuner கார்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் கடந்த வாரம் அளித்த புகாரில், தான் Pal Aqua என்ற நிறுவனத்தை ஹரியானா மாநிலத்தில் நடத்தி வருவதாகவும், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நிதி உதவி தேவைப்பட்டதால் தனக்கு நெருக்கமான நண்பரான ராஜசேகர் @ S.R.தேவர் என்பவரிடம் கூறி இருந்ததாகவும் பின்னர் ரூ.70 கோடி கடனாக ஏற்பாடு செய்து தரும்படி கேட்ட உடன் உறுதியளித்ததும் அவரது கூட்டாளிகள் ரஜிதா மிர்ணல்சன் @ ரேஷ்மின். ராமு மற்றும் தசரதன் ஆகியோர்களை அறிமுகம் செய்து வைத்ததாகவும். அவர்கள் சிங்கப்பூர் நிதி நிறுவனம் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு 2 % தபால் முத்திரை மற்றும் பதிவு கட்டணத்தை முன் கூட்டியே செலுத்த வேண்டும் எனக் கூறியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பிறகு அவர்களின் வார்த்தைகளை நம்பி முன்கூட்டியே சுமார் ரூ.1.40 கோடி ரொக்கமாகக் பணம் கொடுத்ததாகவும், அதற்கு மேற்படி நபர்கள் போலியாக ரூ.70 கோடிக்கான வரை ஆவணம் வோலையைக் காட்டி, அக்கடன் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறியதாகவும் ஆனால். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி கடன் தொகையைப் பெற்றுத் தராமலும், கொடுத்த பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மத்தியக் குற்றப் பிரிவின் ஆவண மோசடி பிரிவு-II ல் (EDF-II) வழக்குப் பதிவு செய்யப்பட்டு. விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி ஆவண மோசடி பிரிவு – II, உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர். 12.10.2023 அன்று. மேற்படி 1) சிவகங்கை மாவட்டம். காரைக்குடியை சேர்ந்த ராஜசேகர் @ S.R.தேவர், ஆ/65, த/பெ.சுப்பையா, 2) சென்னை ஆலப்பாக்கம், போரூரை சேர்ந்த ரஜிதா மெர்னல்சன் @ ரேஷ்மின்,பெ/36, த/பெ.ஜான் பிரபாகர் 3)ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகரை சேர்ந்த ராமு, ஆ/37, த/பெ.ராஜேந்திரன், 4) சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த தசரதன், ஆ/30, த/பெ.ராஜன் , ஆகியோர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரொக்கம் ரூ.1.1 கோடி, 2 Fortuner கார்கள், 2 செல்போன்கள், போலி முத்திரைத்தாள் மற்றும் முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மேற்படி 4 நபர்களை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப் பட உள்ளனர்
Discussion about this post