ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலய பெயரில் மோசடி..!! 3 பேர் மீது வழக்கு பதிவு..!! பரபரப்பான புதுச்சேரி…!!
புதுச்சேரி மாநில காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம், ஸ்ரீ சனி பகவான் ஆலய இணையதளம் மூலம் செலுத்திய கட்டணத்திற்கு தங்களுக்கு அர்ச்சனை பிரசாதம் வரவில்லை என ஒரு நபர் ஆலயத்திற்கு இமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.
அந்த புகாரில் தெரிவிக்கப்பட்ட நபர் பெயரில் கோவிலுக்கு இணையதளம் மூலம் எந்த கட்டணமும் செலுத்தப்படவில்லை என தெரியவந்ததை தொடர்ந்து அந்த நபர் அளித்த அர்ச்சனைக்கான விபரங்களை அடங்கிய ரசீதை பார்த்தபோது அதில் போலியான இணையதள முகவரி இருப்பது தெரிய வந்தது.
இதேபோன்று பல்வேறு பக்தர்களிடமிருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலய பெயரில் போலி இணையதளம் மூலம் பல லட்சம் மோசடி நடைபெற்றுள்ளதாக திருநள்ளாறு கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணமேற்கொண்டனர்.
இதில் திருநள்ளாறு கோவில் இணையதளம் போன்று பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது. பெங்களூரைச் சேர்ந்த ஜனனி பரத் என்ற நபர் மற்றும் போலி இணையதளத்தை சென்னையை சேர்ந்த ஒரு நபருடன் இணைந்து நிர்வகித்து வந்தது தெரிய வந்தது.
மேலும் பெங்களூரை சேர்ந்த ஜனனி பரத் போலி இணையதளம் மூலம் பெறப்படும் கட்டணத்திற்கு திருநள்ளாறு கோவிலை சேர்ந்த வெங்கடேஸ்வரன் குருக்கள் என்ற நபர் அவர்கள் அளிக்கும் முகவரிக்கு கோவில் மூலமாக வழங்கப்படுவது போன்று அர்ச்சனை உள்ளிட்ட பிரசாதங்களை அனுப்பி வைத்து வந்துள்ளார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த ஜனனி பரத் மற்றும் அவருக்கு துணையாக இருந்த சென்னையை சேர்ந்த நபரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ள நிலையில் திருநள்ளாறு சன்னதி தெருவில் சேர்ந்த வெங்கடேஸ்வரனை குருக்களை திருநள்ளாறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..