பணம் கேட்டதற்காக..! தோழிக்கு ஆபாச வீடியோ மிரட்டல் விடுத்த பெண்..!
சென்னை அண்ணாநகர் பகுதியில் தனியார் நிறுவனங்களில் வேளைப்பார்க்கும் இளம் பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர். இந்நிலையில் அறையில் தங்கி இருந்த பச்சையம்மாள் என்ற பெண் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் கடந்த ஆறு மாதங்களாக வாடகை கொடுக்காமல் தங்கி வந்துள்ளார். அப்போது உடன் தங்கி இருந்த 20 வயதுடைய பெண் ஒருவர் பச்சையம்மாளிடம் 6 மாதங்களாக வாடகை பணம் தரவில்லை, என்றும் ஓசியில் சாப்பிட்டு விட்டு ஊர் சுற்றி வருகிறார், எனவே அறையை காலி செய்யுமாறும் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பச்சையம்மாள் திடிரென தனது செல்போனில் இருந்த வீடியோவை காட்டியுள்ளார். வீடியோவில் அந்த இளம் பெண் குளிக்கும் காட்சிகள் இருந்துள்ளது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் அந்த வீடியோவை நீக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பச்சையம்மாள் நீ குளிக்கும் போது இந்த வீடியோவை எடுத்து வைத்துள்ளேன், நான் வாடகை கொடுக்காமல் இங்கு தான் தங்குவேன். என்னை வெளியே அனுப்ப நினைத்தால் உனது வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன இளம் பெண் நடந்ததை குறித்து ஜெ ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற போலீசார் பச்சையம்மாள் மீது ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்த வழக்கின் கீழ் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..