திருப்பூரில் பேப்பர் ஸ்டோர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…
திருப்பூர் மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள பேப்பர் ஸ்டோர் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அட்டைப் பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர் மாநகர் மேட்டுப்பாளையம் சாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு எதிரே சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான கருணாம்பிகை பேப்பர் ஸ்டோர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் ஏராளமான அட்டைப் பெட்டிகள் மற்றும் பிரின்டிங் செய்ய பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை கிளம்பியது.
இதனால் அப்பகுதியில் கரும்பு வகைகள் எழும்பி காற்று மாசு ஏற்பட்டதுடன் அந்த பகுதியை கரும்புகையால் சூழ்ந்தன இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலைகளில் கூடினர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அட்டைப்பெட்டிகள் மற்றும் பிரின்டிங் பேப்பர்கள் எரிந்து சேதமடைந்தன.
தொடர்ந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)