சமீபத்தில் பெங்களுருவை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் மனைவி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். தற்போது, அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அவ்ரியா மாவ்ட்டத்தை சேர்ந்தவர் மோகித் யாதவ். இவர் 7 ஆண்டுகள் காதலித்து பிரியா என்பவரை கடந்த 2023ம் ஆண்டு மணந்தார். சிமெண்ட் நிறுவனத்தில் இன்ஜீனியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அங்குள்ள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அடுத்த நாள் காலை கதவு திறக்கப்படாததால், ஹோட்டல் ஊழியர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது, மோகித் தூக்கில் தொங்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து, அவரின் உடைமைகளை சோதனை செய்தகர். அப்போது, இறப்பற்கு முன் வீடியோ ஒன்றை அவர் பதிவு செய்து வைத்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, எனது மனைவி பிரியா 2 மாதங்களுக்கு முன் கர்ப்பமானார். இந்த சமயத்தில் அவருக்கு பீகாரில் ஆசிரியை பணி கிடைதுதுத. உடனே, எனது மாமியார் அவரின் கர்ப்பதை கலைக்க வைத்து விட்டார்.. எனது மனைவியின் நகைகள் அனைத்தையும் மாமியார்தான் வைத்துள்ளார். நான் வரதட்சணையே வாங்காமல்தான் திருமணம் செய்தேன். ஆனால், என் மீது வழக்கு தொடர போவதாக மனைவியும் மாமியாரும் மிரட்டுகின்றனர்.
எனது வீட்டை மனைவி பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கவில்லை என்றால், போலியாக வரதட்சணை வழககு தொடர போவதாக பிரியாவும் அவரின் குடும்பத்தினரும் மிரட்டுகின்றனர். இதனால், நான் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். எனது இந்த முடிவுக்காக என்னை பெற்றவர்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது. இறப்புக்கு பிறகும் நீதி கிடைக்கவில்லை என்றால் எனது அஸ்தியை சாக்கடையில் கலந்து விடவும்
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.