முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..!! வெளியான காரணம்..!!
அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 8க்கும் மேற்பட்டோர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
விஜயபாஸ்கர் வீட்டில் ஈடி சோதனை :
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறையும் சோதனை நடத்தியிருந்தது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.
தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் சூழலில் மீண்டும் அமைச்சர் விஜபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது ஈடி சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் விராலிமலை எம்.எல்.ஏ-வாக விஜயபாஸ்கர் இருந்த போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடா வழக்கு , குட்கா முறைகேடு போன்ற வழக்குகளின் கீழ் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் அதன்பின் சோதனை குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இதற்கு முன் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த தகவல்களை வைத்து தற்போது விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்.
சென்னை, மதுரையில் திருவேங்கை வாசல் கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகப்படியான கற்கள் வெட்டி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரது குவாரியிலும் ஏற்கனவே ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அமலாக்கதுறை அதிகாரிகள் மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். அனைத்து இடங்களிலும் முழுசோதனை முடிந்த பின்னே விவரம் வெளிவரும் என அமலாக்கதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்து அதிமுகவினர் மற்றும் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பு திரண்டுள்ளதால் பாதுகாப்புப் பணியில் இலுப்பூர் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.