தேர்தல் பத்திர திட்டம் மறு ஆய்வு..!! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..!!
தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது..
ஒரு சில தனியார் நிறுவனங்கள் சில அரசியல் கட்சிகளின் கீழ் செயல்பட்டு வருவதாகவும் ஒரு சில நிறுவனங்களுக்கு அக்கட்சிகள் நன்கொடை அளிப்பதால் அதனை முறைபடுத்தும் விதமாக தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த தேர்தல் பத்திரமானது எஸ்.பி.ஐ. வங்கிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டது., அதன் பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடைகளை குவித்தது..
அதன் பின்னர் தேர்தல் பத்திரத்தின் மூலம் அரசியல் கட்சிகள் நிதியை பெற்றுய்க்கொண்டு அரசியல் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்தது.
இந்நிலையில், தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “மறுஆய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், தீர்ப்பின் பதிவுகளில் பிழைக்கான முகாந்திரம் இல்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு விதிகள் 2013-ன் ஆணை XLVII விதி 1-ன் கீழ், மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.