திருச்சியில் துரைவைகோ உருக்க பேச்சு..!!
திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிவிக்கப்பட்டிருக்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின், துரை வைகோ விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேகரன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ,திருச்சி மக்களவைத் தொகுதி மக்களுக்கு எல்லா தேவையும் தன்னால் சாத்தியப்பட்ட அனைத்து தேவைகளையும் கட்டாயம் நிறைவேற்றி தருவேன் என உறுதி அளித்தார்
மேலும் பம்பரம் சின்னத்தை பெறுவதற்கு உண்டான அனைத்து வகையான முயற்சிகளையும் வைகோ மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், ஏதாவது ஒரு சுயாட்சி சின்னத்தில் போட்டியிடுவேன் என தெரிவித்தார்
அதனை தொடர்ந்து பேசிய துரை வைகோ இந்த நாட்டிற்காக, அரசியலுக்காக தனது குடும்பமும், தானும், தனது தந்தையும் இழந்தது அதிகம் என்று உருக்கமாக கூறினார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக திருச்சி சென்ற துரை வைகோ ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார், பின்னார் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலை சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்