Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நாடாளுமன்ற மக்களவையில் துரை வைகோ பேச்சு..! பாராட்டிய  வைகோ..!  முன்வைத்த  5 கோரிக்கைகள்..?

நீட் தேர்வின் பாதிப்புகளை குறிப்பிட்டு,  ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களின் நலன் கருதி நீட்   தேர்வை   முழுமையாக  தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்...

by logeshwari
July 3, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

நாடாளுமன்ற மக்களவையில் துரை வைகோ பேச்சு..! பாராட்டிய  வைகோ..!  முன்வைத்த  5 கோரிக்கைகள்..?

 

 

 

 

 

இந்திய   நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து   தேர்தலுக்குப்  பிறகு  கடந்த  ஜூன் 24ம் தேதி  முதன்முறையாக  நாடாளுமன்றம் கூட்டம்  நடைபெற்றது.  அதில்  பங்கேற்ற  திருச்சி  நாடாளுமன்ற  எம்.பி.துரைவைகோ  பேசியதாவது.

துரைவைகோ  நன்றி : 

கடந்த  மாதம்  ஜூன் 25ம் தேதி மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில்   நான் பதவியேற்றுக்  கொண்டேன். இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில்   பங்கேற்று எனது கன்னிப் பேச்சை பதிவு செய்துள்ளேன்.

“ஜனநாயகக் கோவிலான இந்திய நாடாளுமன்றத்தில் எனது கன்னி உரையை நிகழ்த்த வாய்ப்பளித்தற்கு  எனது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன்”  எனக்  கூறி  பேச்சைத் தொடங்கினார்.

ஐந்து முக்கியமான பிரச்சனைகள் :

திருச்சி  நாடாளுமன்றத்  தொகுதியைச்  சேர்ந்த  பத்து  இலட்சத்திற்கும்  அதிகமான மக்களின் எதிர்பார்ப்பையும்   நம்பிக்கையையும்   என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இந்த நாட்டில் பற்றி எரியும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஐந்து முக்கியமான பிரச்சனைகள்   குறித்து  கவனப்படுத்த  விரும்புகிறேன்.

வேலை வாய்ப்பு :

முதலாவதாக,  இந்தியாவின் பொறியியல்  ஆற்றல்  மையமான திருச்சிக்கு புத்துயிர் அளிப்பது   தொடர்பாக  பேச  விரும்புகிறேன்.   பெல் தொழிற்சாலை, OFT, கோல்டன் ராக் ரயில்வே பணிமனை மற்றும் HAPP ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்த  வேண்டும்.

அதை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தி திருச்சி   நகரத்தின் பொருளாதார   வளத்தை   உயர்த்தவும் கோரிக்கை வைக்கிறேன்.

தமிழக மீனவர்கள் :

இரண்டாவதாக, இலங்கை கடற்படையின் ஆக்கிரமிப்புகளையும் வன்முறைகளையும் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் தமிழக மீனவர்களின் அவல நிலையை கூற விரும்புகிறேன்.

இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் பெரும்பாலான மீனவர்கள் பின்தங்கிய மாவட்டங்களான  இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை  மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக  இருக்கிறார்கள்.   இதுவரை 3020 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 340 மீன்பிடி   படகுகள்   பறிமுதல்   செய்யப்பட்டுள்ளது.

நமது  மீனவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கட்சத்தீவை மீட்கவும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும்   ஒன்றிய   அரசு   உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

சுற்றுச்சூழல்   பாதிப்பு   மதிப்பீட்டு  ஆணையம்  ஒப்புதல் :

மூன்றாவதாக, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய தென்னக நதிகளை இணைப்பது முழு தீபகற்பப் பகுதிக்கும் வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறி, காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல்   பாதிப்பு   மதிப்பீட்டு  ஆணையம்  ஒப்புதல் அளித்துள்ளது.

7000 கோடி இதற்கு தேவைப்படும் நிலையில் தமிழக அரசு தனது சிறிய ஆதாரங்களுடன் இப்பணியை ஏற்னவே முன்னெடுத்துள்ளது. எவ்வாறாயினும் தீபகற்ப நதிகளை இணைக்கும் முழுத் திட்டத்தை  தொடங்கவும்,  நிதி   அளிக்கவும் ஒன்றிய அரசு முன் வரும் என நம்புகிறேன்.

இதனால் ஐந்து மாநிலங்களின் வறட்சி பாதித்த பகுதிகள் குறிப்பாக, எனது தொகுதிக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகள் பயனடையும். தென்னக நதிகள் இணைப்பால் ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் பயனடைவார்கள். ஆகவே, தேவையான   முன்   முயற்சிகளை   ஒன்றிய   அரசு   எடுக்க  வேண்டும்.

விவசாயிகள் தாக்கம் :

ஒன்றிய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியபோது, அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடுமையான வெய்யிலிலும், மழையிலும், பட்டியினியிலும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும் அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன..,  விவசாயிகள் தாக்கப்பட்டனர்.

அவர்கள்மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை பெற்றுத்தரவும், விவசாயிகளுக்கு நிலையான சூழலை உருவாக்கவும் ஒன்றிய அரசு தவறிவிட்டது. அவர்களின் போராட்டங்களை ஒன்றிய அரசு புரிந்துகொள்ளவில்லை. ஆகவே, விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், சிறந்த எதிர்காலத்தையும்   உருவாக்க  வேண்டும்  என  ஒன்றிய  அரசை  வலியுறுத்துகிறேன்.

தேசிய தேர்வு முகமை :

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் மற்றும் இதர தேர்வுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை நீக்குவதற்கு உண்டான வழிமுறைகள் எதுவும் குடியரசு தலைவர் உரையில் இடம்பெறாததற்கு வருந்துகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக   நிறைவேற்றப்பட்ட  நீட்  விலக்கு  மசோதா  2022 -க்கு  குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க  வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நீட் தேர்வு : 

நீட் தேர்வின் பாதிப்புகளை குறிப்பிட்டு,  ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களின் நலன் கருதி நீட்   தேர்வை   முழுமையாக  தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நான் மதிமுக சார்பிலோ,   இந்தியா கூட்டணி சார்பிலோ,  எந்த ஒரு சித்தாந்தத்தின் சார்பிலோ பேசவில்லை.  ஆனால் நான்,  சாமானியர்களின் சார்பாகவும், விவசாயிகளின் சார்பாகவும், மாணவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகவும் பேசுகிறேன்.

அரசியல் எல்லைகள், சித்தாந்தங்களை தாண்டி சாதாரண மக்களுக்கு சேவை செய்வோம். அவர்களை அரவணைப்போம் என இந்த அவையின் முன்பு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

“வாழ்க சமூக நீதி,
வாழ்க சமத்துவம்,
வாழ்க மதச்சார்பின்மை,
வாழ்க சகோதரத்துவம்,
வாழ்க உலகளாவிய சகோதரத்துவம்..!

இவ்வாறு  உரையை   தயாரித்து  இருந்தேன்.  உரையாற்றுவதற்கு   ஐந்து   நிமிடங்கள்  வாய்ப்பு தரப்படும்  என  தெரிவித்து  இருந்த நிலையில், இரண்டு நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. நான் உரையாற்றும்போது, தரவுகளை தவிர்த்து கையில் எந்த குறிப்பும் வைத்துக்   கொள்ளாமல்   உரையாற்ற   வேண்டும்   என   நினைத்து   இருந்தேன்.

ஆனால்,   இரண்டு   நிமிடங்கள்  மட்டுமே  தரப்பட்டதால்  தயாரித்து  வைத்திருந்ந  உரையின் பல   பகுதிகளை   விட   வேண்டியதாயிற்று.  முழுமையாக பேச முடியவில்லை. உரையை நிறைவு   செய்வதற்கு   உள்ளாகவே   பேச்சை   நிறுத்தும்படி  ஆயிற்று.

வைகோ பாராட்டு :

கழகப் பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் எனது கன்னிப் பேச்சை வெகுவாகப் பாராட்டினார். கழகத் தோழர்கள் உனது உரையை கேட்டு மகிழ்ந்தார்கள் என தெரிவித்தார். ஆனால், எனக்கு நிறைவு இல்லை என அவரிடம் சொன்னேன்.

“இதுபோன்ற அவைகளில் நீ இதற்கு முன்னால் உரையாற்றியது இல்லை. இது தான் முதல் உனது முதல் உரை. பெரிய பேச்சாளர்களே முதல் வாய்ப்பில் தடுமாறுவார்கள். ஆனால் நீ சிறப்பாக   பேசி   இருக்கிறாய்’ என தலைவர் அவர்கள் பாராட்டினார்.

திட்டமிட்டபடி உரையாற்ற முடியாவிட்டாலும் உங்கள் அனைவரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும்    பூர்த்தி   செய்ய   முயன்று   இருக்கிறேன்.

– லோகேஸ்வரி.வெ

Tags: #duraivaikoDURAIVAIKO SPEECHதிருச்சி நாடாளுமன்ற எம்.பி துரைவைகோதுரை வைகோ பேச்சுமதிமுக பொதுச்செயலாளர் வைகோ
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.