கோடையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் எலுமிச்சை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலத்தில் எலுமிச்சை பழத்தின் தேவை மற்றும் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகியவற்றில் இருந்து தமிழகத்திற்கு வரும் எலுமிச்சை வரத்து பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது. மற்றொருபுறம் தமிழகத்தில் பனியால் எலுமிச்சை விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் எலுமிச்சையின் வரத்து குறைந்துள்ளது.
வழக்கமாக ஒரு முட்டை 1800 ரூபாயில் இருந்து 2200 ரூபாய் வரை விற்கப்படும் எலுமிச்சை, தற்போது 3000 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கடந்த மாசம் ஒரு எலுமிச்சை ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 20 ரூபாய் வரை விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.