திரௌபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா..!!
வெகு நூற்றாண்டு காலம் பாரம்பரியம் மிகுந்த பழமை வாய்ந்த புகழ் பெற்ற தேனாம்பேட்டை, த்ரௌபதி அம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு கோலா காலமாக நிறைவு பெற்றது. இந்த கோவில் 150 ஆண்டு களுக்கும் மேல் பழமையானது என்பது குறிப்பிட தக்கது.
அருள் மிகு விஷ்ணு சுவாமி இடத்தில் அமைந்துள்ளது. அண்ணனின் பக்கத்தில் இருந்தே அருள் பாலிக்க வேண்டும் என்பதற்காக விஷ்ணு சுவாமி கோவில் பக்கத்திலேயே திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
கடந்த மாதம் ஏப்ரல் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு. மக்களுக்கு காட்சி கொடுத்து, அருள் பாலித்துள்ளார்.
மே 4ம் தேதி விளக்கு பூஜையும் , மே 5ம் தேதி அம்மனுக்கு பால் குடம் எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு மேல் அம்மனுக்கு தீ மிதி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களும் 48 நாட்கள் விரதம் இருந்து, 11 நாட்களுக்கு முன் காப்பு கட்டி , நேற்று மாலை தீ மிதித்துள்ளனர்.
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஆண்டு தோறும் தீ மிதி அன்று, திரௌபதி அம்மன் முன்பு ஒரு பானை நிற்க வைத்து அதற்கு முன் கத்தி நிற்க வைப்பார்களாம். இந்த கத்திக்கு பின் எந்த வித ஆதரவும் ( Support ) இன்றி, அம்மனின் சக்தியால் மட்டுமே கத்தி நிற்கும் என்றும் . தீ மிதி, முடிந்ததும் தானாகவே அது சரிந்து விடும் என்றும். கோவிலின் குருசாமி தெரிவித்தார்.
மற்ற அம்மன் கோவில்களில் வழங்கப் படுவதைப் போல, இந்த கோவிலில் குங்குமம், திருநீர் வழங்கப்பட மாட்டாது. மஞ்சள் மட்டும் தான் வழங்கப்படும். திரௌபதி அம்மனுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து விளக்கு ஏற்றி வழிபட்டால்.
“திருமணம் ஆகாதவர்களுக்கு மாங்கல்ய வரம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம், திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை என்றும் கூறினார்.
மேலும் இது போன்ற பல தெய்வீக தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி