மனைவியில் நடத்தையில் சந்தேகம்.. வாக்குவாதத்தில் ஏற்பட்ட சோகம்..!
சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (36) கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இந்துமதி (32) என்ற மனைவியும் 12 வயதில் வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் சுரேஷ் மற்றும் இந்துமதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக தன்னுடைய மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு சுரேஷ் அடிக்கடி வாக்குவதத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறி இந்துமதி பக்கத்து வீட்டுக்கு தூங்குவதற்காக சென்றுள்ளார்.
காலை அவர் வீட்டுக்கு வந்தபோது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சணை பூதகரமாக வெடித்தது. வாக்குவதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இந்துமதியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த இந்துமதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்துமதியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுரேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்