ஓசூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உப்பரதம்மாண்டரப்பள்ளி பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முனிராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து உத்தனப்பள்ளி போலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த கொலைக்கு காரணமான உப்பரதம்மாண்டரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக மேலும் ஆறு மாத கால சிறு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது