பிறரிடம் வேலை வாங்காதே அது உபத்திரத்தில் முடியும்…!! குட்டிஸ்டோரி-30..
ஒரு பெரிய காடு., அந்த காட்டில் மான், சிங்கம், புலி, யானை என அனைத்து வகை விலங்குகளும் வசித்து வருகின்றது. அந்த விலங்குகளுக்கு எல்லாம் தலைவராக சிங்கம் இருந்தது, அந்த சிங்கம் என்ன சொல்லுகிறதோ அதுபடித்தான் மற்ற விலங்குள் செயல்பட வேண்டும் என சிங்கம் ஆணையிடுமாம்.
காலை விடிந்ததும் அனைவரும் சிங்கத்திடம் சென்று இன்றைக்கு நான் எங்கு சென்று வேட்டையாடுவது என கேட்க அதற்கு சிங்கம் நீ பக்கத்துக்காட்டிற்கு சென்று வேட்டையாடி அனைவருக்கும் உணவு கொண்டு வந்து தர வேண்டும். அப்படி நீ தரவில்லை என்றால் உன் குழந்தையே நாங்கள் உணவாக சாப்பிட்டுவிடுவோம் என்று மானிடம் சிங்கம் கூறியுள்ளது.
மானும் அதற்கு பயந்து வேட்டைக்கு கிளம்பியுள்ளது, பக்கத்து காட்டிற்கு சென்று பார்த்தல், கண்ணிற்கு எட்டிய தூரம் வரை எந்த விலங்குகளும் தென்படவில்லை. மானும் காடு முழுவதும் சுற்றி அலைந்து திரிந்து பார்த்து ஏதும் கிடைக்கவில்லை வேதனை அடைந்த அந்த மான் நேரம் போய்க்கொண்டு இருக்கிறது.
நான் உணவு இல்லாமல் எப்படி திருப்பி செல்வது, உணவு கொண்டு செல்லாவிட்டால் என் குழந்தையே சாப்பிட்டு விடுவார்களே, என்ன செய்வது என்று தெரியாமல் மரத்தின் கீழ் நின்று கொண்டு அந்த மான் சிந்தித்திருந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற குரங்கு.., மானிடம் சென்று ஏன் மிகவும் கவலையாக இருக்கிறீர்கள் என்று கேட்டது. அதற்கு அந்த மான் அது வாழ்கின்ற காட்டின் ராஜ்யம் பற்றியும், இன்று நான் உணவு கொண்டு போகாவிட்டால் என் குழந்தையே சாப்பிட்டுவிடுவார்கள் என்று சொல்ல மான் சரி நான் உனக்கு உதவி செய்கிறேன் என சொன்னது.
இன்று என் இனத்தில் ஒரு குரங்கு உடல்நலம் சரி இல்லாமல் இறந்து விட்டது அதை கொண்டு சென்றுவிட்டு உன் குழந்தையே காப்பாற்று என சொல்லி குரங்கை கொண்டு சென்று தன் குட்டி மானை காப்பாற்றிவிட்டது.
இரண்டு நாட்கள் கழித்து சிங்கத்தின் கூட்டத்திற்கு உடல்நலம் சரியில்லாமல்.., போக மானை கூப்பிட்டு விசாரித்து கொண்டிருந்தார்கள். அப்போ அந்த குரங்கு, எங்கள் இன கூட்டாளி குரங்கு பல மாதங்களாக உடல் நலம் சரியில்லை. அதன் மூச்சு காற்றுபட்டாலே நமக்கு நோய் வந்துவிடும். சாப்பிட்ட உங்களுக்கு வராதா. அடுத்தவரை வேதனை படுத்தி செய்யும் எந்த செயலும் நமக்கு விளைவில் முடியும்.
இதில் இருந்து என்ன புரிகிறது நமக்கும் கஷ்டம் வரும் போதெல்லாம் உதவுவதற்கு யாரது இருப்பார்கள் அவர்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் .
-சரஸ்வதி