ஆதரவற்ற குழந்தைகளுக்கு சப்ரைஸ் கிப்ட் கொடுத்த திமுக எம்.எல்.ஏ..!! குவியும் பாராட்டுகள்…!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ தங்கபாண்டியன் ஆதரவற்ற 233 குழந்தைகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது உடை, இனிப்பு மற்றும் பட்டாசு பொருட்கள் வாங்கிகொடுத்து மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் தான் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் அவர்கள் உதவி செய்துள்ளார்.., என பலரும் நினைத்து கொண்டுள்ளார். ஆனால் இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிவரும் நிலையில் ஏழாவது ஆண்டும் இந்த உதவி செய்துள்ளார்.
தனக்கென்று வரும் மாத ஊதியத்தில் இருந்து இந்த உதவியை செய்துள்ளார்.., புது ஆடைகளுக்கு மட்டுமே 3,15,000 லட்சம் செலவு செய்துள்ளார்.
தீபாவளி என்பது இருப்பவர்கள் மட்டும் கொண்டாடுவது அல்ல.., எல்லோரும் கொண்டாடுவதும் தான், எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் இந்த உதவிகளை செய்து வருகிறார்..
இருப்பதை கொடுப்பதை விட அவர்களுக்கு பிடித்ததை கொடுப்பதே மகிழ்ச்சி.., எனவே ஆதரவற்ற குழந்தைகளை ராஜாப்பாளையத்தில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் துணி கடைக்கு.., அழைத்து சென்று அவரவர்களுக்கு பிடித்த உடையை எடுத்து கொள்ளுங்கள் செலவை பற்றி கவலைபட வேண்டாம் என சொல்லி எடுத்து கொடுத்துள்ளார்..,
இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.