பிடிஆர் ஆடியோ விவகாரத்தை திசை மாற்றுவதற்காக தமிழக அமைச்சரவை இலாக்கா மாற்றம் நடைபெற்றுள்ளது. -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடியாரின் 69 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அன்னதான முகாம், ரத்ததான முகாம், மருத்துவ முகாம் போன்ற முகாம்களை நடத்தி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றை மாணவர்களுக்கு நடத்தியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகின்றனர்.
எடப்பாடி பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகவும், இளைஞர்கள் எழுச்சி தினமாகவும் கடைபிடிப்பதற்கு கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்த போது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். இந்த இரண்டு ஆண்டில் ஒன்றுகூட நிறைவேற்றாமல், நீட் தேர்வு ரத்து நிறைவேறும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவர்களின் பொய்யை நம்பி ஏமாந்தனர், பழைய பென்ஷன் திட்டம், மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி கிடைக்கும், நிவாரணம்
இந்த அரசு 100% தோல்வியுற்ற அரசாக, சண்டை சச்சரவு, ஆளுநரோடு மோதல், மத்திய அரசுடன் மோதல், நிதிப் பெற முடியாமல் இயலாமை, நிர்வாகக் குளறுபடி என ஒட்டுமொத்த தோல்வி முகத்தோடு இந்த அரசு உள்ளது.
1222 பொதுக்கூட்டங்களை நடத்தி இந்த தோல்வியை திசை திருப்புவதற்காக முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் எத்தனை லட்சம் கூட்டங்கள் நடத்தினாலும் இந்த தோல்வியை மறைக்க முடியாது என்பதால் புதிய வடிவமைப்பை கொடுப்பதற்காக, குறிப்பாக அமைச்சர் முப்பதாயிரம் கோடி குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆடியோ வெளியானதைப் போல இந்த ஆடியோ விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதை திசை மாற்றுவதற்கு அமைச்சர் விடுவிப்பு, சேர்ப்பு, இலாக்கா மாற்றம் என்று புதிய அமைச்சரவை என உருவத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்துள்ளார்கள் இந்த முயற்சியும் மக்களிடத்தில் எடுபடாது என குற்றச்சாட்டினார்.