Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அண்ணா.. தேவர் விவகாரத்தில் உங்கள் பாச்சாக்கள் செல்லாது.. அண்ணாமலையை வறுத்தெடுத்த மதிமுக துணைப்பொதுச்செயலாளர்..!

by Dharma
September 21, 2023

அண்ணாமலையின் பாச்சாக்கள் எதுவும் செல்லுபடியாகாது என்று மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு. இராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்ணாவும் தேவரும்…

அண்ணா பிறப்பு
15.09.1909
தேவர் பிறப்பு
30.10.1909

இருவரும் அறுபது வயது அடையும் முன்பே மறைந்தது ஓர் வரலாற்றுச் சோகம்.. அரசியல் பாலகன் அண்ணாமலை அவர்களே …

இருபதாம் நூற்றாண்டின் தமிழர் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நாயகன்
பேரறிஞர் அண்ணா அவர்கள் அவர் கருத்தை சொன்னார்… தென்னாட்டின் முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர் அவர்கள் அவர் கருத்தை பிரதிபலித்தார்..

இருவரும் வெவ்வேறு துருவங்கள் தான்.. அவர்களின் கொள்கைகள் வேறு …வேறு … இதில் மன்னிப்பு என்பதற்கான அவசியம் எழவில்லை.. நான் படித்து உணர்ந்த அளவில் ராஜதந்திரம் என்கிற கபட வேட அரசியலை தேவர் அறிந்து இருக்கவில்லை.. மனதில் நினைப்பதை பேசுபவர்.
அண்ணா அவர்களும் அதே பாணி தான்…

பழுத்த வெள்ளரிப்பழத்தைக் கூட பெருவிரல் நகத்தால் கீறுவதற்கு அஞ்சுவேன் என்று சொன்ன மனித நேய மாண்பாளரான, ஆன்மீகச் செம்மல் அய்யா
பசும்பொன் தேவர் அவர்கள், செய்யாத குற்றத்திற்கு சிறையேகி வழக்குகளில் சிக்கிய போது, பி.ஜே.பி.யின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
தேவரை நாங்கள் பாதுகாக்கிறோம் என முன்வரவில்லை..
வரலாறு விடுதலை செய்ய வெளிவந்தார் தேவர் …

அன்றைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் சிறுகதை மன்னன் எஸ்.எஸ். தென்னரசு திருமணம் நடைபெற இருந்த நாளில் தேவர் காலமானார்… அய்யா தென்னரசு திருமணத்தில் பங்கேற்க அண்ணாவும், என்.வி.என். எம்.ஜி.ஆர். எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் பலரும் இன்றைய பாண்டியன் இரயிலில் வந்து இறங்குகிறார்கள்.

மணமகன் தென்னரசு அவர்களே வரவேற்க வந்துள்ளார். சோகமாக இருந்த தென்னரசுவிடம் புது மாப்பிள்ளை முகத்தில் ஏன் சோகம் என வினவுகிறார் அண்ணா.. பசும்பொன் தேவர் அவர்கள் மறைந்து விட்டார்.. அவருக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் செல்வோம். திருமணத்தை நாளையோ நாளை மறுநாளோ நடத்தி கொள்வோம் என தென்னரசு கூற;

நேராக பசும்பொன் சென்று அஞ்சலி செலுத்தி தேவரின் பெருமைகளை எடுத்து பேசி இரங்கல் உரையாற்றி புகழ் வணக்கம் செலுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
(பகை இருப்பின் இது சாத்தியமா) அந்த பெருமை திராவிட இயக்கத்திற்கும், தலைவர் அண்ணாவிற்கும் உண்டு! தேவர் அவர்கள் தீவிர இந்து மத நம்பிக்கையாளர். உண்மையான ஆன்மீக வாதி… முழுமையான பிரமச்சாரி…
பெரியார், அண்ணா கொள்கைகளின் மீது நேர் எதிர் கருத்து கொண்டவர்.

அந்த அடிப்படையில் பல விவாதங்கள் நடந்தது ஆவணங்களில் உள்ளது …..
இன்றைய நாளில் அவற்றைக் கிளற வேண்டிய அவசியமில்லை… ஏன் தலைவர் பெரியாரின் அதிரடி தாக்குதலுக்கு ஒரு கட்டத்தில் ஆளானவர் தான் அவரது தலை மாணாக்கர் அண்ணா… பெருந்தலைவர் காமராசர் – பேரறிஞர் அண்ணா;
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோருக்கும்,

தலைவர் கலைஞருக்கும் அவரது உயிரனைய தம்பியான எம் தலைவர் வைகோ அவர்களுக்கும் அது பொருந்தும்.. மூதறிஞர் ராஜாஜியும் பெருந்தலைவர் காமராஜரும் கருத்து முரண் கொண்டு தாக்கிக் கொண்டவர்கள் தான்.
காமராஜருக்கும் ம.பொ.சிக்கும் கூட இது பொருந்தும்…

தவிர, மகாத்மா காந்தி – நேதாஜி முரண்பாடுகள் உட்பட அரசியல் என்றாலே வெவ்வேறு துருவங்கள் தான்… மாறுபட்ட கருத்துகள்தான்.. இவற்றை எல்லாம் அந்தந்த காலகட்ட அரசியலோடு பொருத்தி பார்த்து அன்றைய அரசியல் இப்படி தான் இருந்துள்ளது என கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர அதை கிளறி குளிர் காய முனைவது அவசியமற்றது, மக்களிடம் எடுபடாது என்பதோடு அண்ணாமலைக்கு வெள்ளாமை அவ்வளவு தான் என பொதுமக்கள் நினைக்கும் செயலாகவே முடியும்..

அரசியல் பாலகன் அண்ணாமலைக்கு சொல்லி வைக்கிறேன்… ஈடற்ற ஆன்மீகச் செம்மலாக விளங்கிய பெருமகன் பசும்பொன் தேவரை மதிக்கிற 99 விழுக்காடு மக்கள்; ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் ஏதோ ஒரு திராவிட இயக்கத்தைத்
தான் நேசிக்கிறார்கள்.. நேசிப்பார்கள்… உங்க பாச்சாக்கள் எதுவும் அவர்களிடம் என்றும் செல்லுபடியாகாது வரலாறு உணர்த்தும் உண்மை இதுவே என தெரிவித்துள்ளார்.

Tags: அண்ணாமலைதி.மு. இராசேந்திரன்மதிமுகமதிமுக துணைப் பொதுச்செயலாளர்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

நீட் தேர்வு ஒரு மோசடி.. உண்மையை போட்டுடைக்கும் வைகோ..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.