எடப்பாடி பழனிசாமி நிவாரண நடவடிக்கை விரைந்து வழங்க வலியுறுத்தியுள்ளார்..
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட மக்களுக்கு விரைந்து நிவாரண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டி வருகிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்ததோடு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தததால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்கவும், இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும் கேட்டுகொண்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையைப் போன்று தென் தமிழகத்திலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் 6 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.