21 குண்டுகள் முழங்க டி.ஐ.ஜி விஜயகுமார் உடல் அடக்கம்..!!
கோவை மாவட்டம் சரக டிஐஜி விஜயகுமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரின் தற்கொலை தூண்டலுக்கு கவர்னர் ரவி காரணமாக இருக்க கூடுமோ என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
டிஜிபி சங்கர் ஜிவாலும் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகுமார் அவரின் உடல், அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் டிஜிபி சங்கர் ஜிவால்.., மறைந்த விஜயகுமார் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தினற்கு ஆறுதல் செலுத்தினார்.
கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜ் பணியில் சேர்ந்தார். சிவங்கர் பாபா, நீட் தேர்வு, மற்றும் சாத்தன் குளம் இரட்டை கொலை வழக்கு போன்ற வழக்குகளை சிறப்பு விசாரணை செய்தவர். காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றியவர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை டிஐஜியாக பொறுப்பேற்றார்.
கோவை சரகம் என்பது நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களை கொண்ட ஒன்று. இன்று அதிகாலை அவரின் வீட்டில் இருந்து வெளியே வாக்கிங் சென்றுள்ளார். அப்பொழுது உடன் வந்த மெய்காப்பாளரின் துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
ஏடிஜிபி விசாரணை :
கோவையில் இருக்கும் சட்டம் ஒழுங்கு பிரிவு ஏடிஜிபி அருண், விஜயகுமாரின் மரணம் குறித்து நேரடி விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணையில் ஏடிஜிபி அருண் :
விஜயகுமார் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர். அவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.., அதற்காக மருத்துவர்களை சந்தித்து மருந்தும் எடுத்து வந்துள்ளார். விஜயகுமாரின் உடலுக்கு மன அழுத்தம் மட்டுமே காரணம், அதை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். மேலும் காரணம் குடும்ப பிரச்சனையாக இருக்குமோ அல்லது யாரவது பின்னணியில் இருக்கிறார்களா என்று பொய் தகவல்களை பரப்ப வேண்டாம் என.., அவர் கூறினார்.
நான்கு மாவட்டங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து உழைத்த ஒரு அதிகாரி, தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால். தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். காவல் துறையில் திறமையான அதிகாரி என பெயர் பெற்றவர். இவரது மனைவி பல் மருத்துவம் படித்தவர்.. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.., மகளும் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
காவல் துறையில் பணியாற்றிய இடங்களில் நல்ல அதிகாரியாகவும், அனைத்து காவலர்களிடமும், நன்கு பழகக்கூடியவராக இருந்து இருக்கிறார்.. இவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு கவர்னரும், மற்றும் பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
21 குண்டு முழங்க உடல் தகனம் :
தற்கொலை செய்துக்கொண்ட டிஜிபி விஜயகுமார் உடலை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் ஐஜிகள் சுமந்து சென்று சடங்குகள் செய்துள்ளனர். பின் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது. பின் காவல்துறை சார்பில் 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.