சில்க் ஸ்மிதா வேலைக்கார்களை இப்படி தான் நடத்தினாரா? – பிரபல இயக்குநர் பேட்டி..!
சில்க் ஸ்மிதா:
70களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக தனது திரை வாழ்க்கையை துவங்கிய சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானர். அதன் மூலமே ஸ்மிதா என்ற அவருடைய பெயர் சில்க் ஸ்மிதா என்று மாறியது.
மர்லின் மன்ட்ரோ :
மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட இவர் தமிழ் சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத அளவுக்கு ஒரு வெற்றி இடத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.
இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கிளாமரான காட்சிகளில் நடித்திருந்தார்.
பிழைப்புகாக சென்னைக்கு வந்த இவர் தனது உறவினர் வீட்டில் தங்கினார். சினிமாவில் மீது இருந்த ஆர்வத்தினால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வெற்றியை தொட்ட நிலையில் இவரது மரணம் ரசிகர்களுக்கும் திரைதுறையினருக்கும் இன்று வரை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்னாவின் இயக்குநர் கணவர் கிருஷ்ண வம்சி சில்க் ஸ்மிதா பணியாற்றிய அனுபவத்தை பற்றி பேசியுள்ளார்.
கிருஷ்ண வம்சி கூறியது:
அதன்படி அவர் கூறுகையில், ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் எனக்கான ஒரு இடத்தை பிடிக்க சுறுசுறுப்பாக வேலை செய்த சமயம் ஷூட்டிங்கில் எனக்கு கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்வேன்.
அப்படி இயக்குனர் வரப்பிரசாத் ராவிடம் என்னை அறிமுகப்படுத்த ஒருவர் என்னை அழைத்து சென்றார். அவரிடம் வேலைக்கு சேர்ந்து நான் செய்யும் வேலைகளை பார்த்த சில்க் ஸ்மிதா என்னை பாராட்டினார்.
பின்பு தயாரிப்பில், இறங்கிய சில்ஸ் ஸ்மிதா, தயாரித்த ஒரு படத்தில் சில மாதங்கள் வேலை செய்திருக்கிறேன்.
அவரிடம் வேலை பார்த்தப்பின் தான் இயக்குனராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருநாள் அன்னப்பூர்ணா ஸ்டுடியோ முன்பு புகை பிடித்துக்கொண்டிருந்தேன்.
என்னை கடந்து ஒரு கார் சென்றது. அந்த காரில் யார் இருக்கிறார் என்பது, எனக்கு தெரியாது. நான் அந்த காரை பெரிதாக கண்டுகொள்ளாமல் புகை பிடித்துக் கொண்டிருந்தேன்.
அந்த கடந்து சென்ற கார் என்னை நோக்கி திரும்பி வந்து வேகமாக பிரேக் போட்டு நின்றது. காருக்குள் இருந்த சில்க் ஸ்மிதா கண்ணாடியை இறக்கியதை பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தேன்.
உடனே கார் விடடு இறங்கி வந்த அவர் என்னிடம் என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? என்று ச கேட்டார் அதற்கு நான் , உங்களை மறக்க முடியுமா, நீங்கள் என்னைநினைவில் வைத்திருக்கிறீர்களா? இல்லையா என்று பலமுறை யோசித்திருக்கிறேன் என்று நான் கூறினேன்.
பின் நான் இயக்கிய படங்களை பார்த்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் கூறி சில்க் ஸ்மிதா பாராட்டினார்.
சில்க் ஸ்மிதாவை பொறுத்தவரை கார் டிரைவராக இருந்தாலும், சரி ஒரு மேக்கப் மேனாக இருந்தாலும் சரி தன்னிடம் வேலை செய்வர்களாக இருந்தாலும் சரி அவர்களை தன் சொந்தக்காரர்கள் போல் தான் நடத்துவார் என்று கிருஷ்ணா வம்சி கூறியிருக்கிறார்.
-பவானி கார்த்திக்