அழிக்கப்பட்ட ஏவுகணை..!! அடிவாங்கிய இஸ்ரேல்..!! ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தளபதி படுகொலை..!!
கடந்த ஒரு வருடதிற்கும் மேலாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடத்தப்பட்டு வரும் இந்த போரானது காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர் முடியாது என இஸ்ரேல் அறிவித்திருந்தது.
அதனை எதிர்த்து காசா மீது அடிக்கடி போர் தொடரும் இஸ்ரேலை எதிர்த்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவர போர் நடத்தப்படும் பகுதிகளில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது..
அதுமட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது., அதில் 3 ஆயிரம் பேர் காயமடைந்த நிலையில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து வடக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டையை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27-ம் தேதி லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஹசன் நஸ்ரல்லா உட்பட 44 பேர் பரிதாபமக உயிர் இழந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் தரைவழி தாக்குதலை நடத்தியது .
இதனையடுத்து இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட்ட நகரங்கள் மீது ஈரான் ராணுவம் அக்டோபர் 1ம் தேதி இரவு ஏவுகணை தாக்குதலை நடத்தினர்., அதற்கு இஸ்ரேல் ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது., அந்த அறிக்கையில் குறிப்பிடிருப்பதாவது “ஈரான் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது..
இந்த தாக்குதல் தீவிரம் அடையாமல் இருக்க அயன் டோம் சாதனங்களை உபயோகப்படுத்தி அந்த ஏவுகணைகளை இடைமறித்து முற்றலுமாக அழித்தோம்., அதில் பலரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்..
அதற்கு ஈரான் புரட்சிகர படை (ஐஆர்ஜிசி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்., அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது.. “ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் தளபதி அபாஸ் நில்போரோஷான் இருவரும் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்தது..
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யாகவே ஈரான் நேற்று இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது… இந்த நிலையில் தான் லெபனானுக்குள் ஊடுருவ முயன்ற இஸ்ரேலின் Egoz சிறப்பு படையின் பிரிவனர் பின்வாங்கி உள்ளனர்.
அதன் பின்னர் இஸ்ரேலின் Egoz சிறப்புப் படைப் பிரிவு என்று அழைக்கப்படும் எலைட் படைப்பிரிவு லெபான் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது., இந்த தரைவழி தாக்குதலில் படைவீரர்கள் தாக்கப்பட்ட நிலையில் இஸ்ரேலும் அடிவாங்கியது குறிப்பிட தக்கது. இந்த இரு படையினருக்கும் நடந்த இந்த தாக்குதலில் 8 இஸ்ரேலிய வீரர்கள் பலியானதை தொடர்ந்து மீதம் இருந்த வீரர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…
இந்த தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், கையால் அடித்தும், குண்டுகளை வீசியும் ஹிஸ்புல்லா படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பயந்த இஸ்ரேல் வீரர்கள் வேறு வழியின்றி லெபனானில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனையடுத்து வடகிழக்கு எல்லைக் கிராமமான அடேஸ்ஸேவிற்குள் ஊடுருவ முயன்ற இஸ்ரேலிய வீரர்களை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்முறையாக இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானின் மீது F-35 போர் விமானங்களை வைத்து தாக்குதலை நடத்தியுள்ளது.. இதனால் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் ஒன்றான் தாஹியில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது.’ கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தளபதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இப்படி பட்ட சூழலில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்று தோற்றுள்ளது..