ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு..! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லைத்தாண்டி சென்று விட்டது. ஆர்.எஸ்.பாரதியை நிச்சயம் சிறைக்கு அனுப்புவோம் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை :
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன் மீது குற்றம் சுமத்தியதாக தி.மு.க.அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த 23 ம் தேதி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்திற்கு நான்தான் காரணம் என்றும்… இதில் எனக்கு கூட்டுச் சதி இருப்பதாகவுன் பேசி இருந்தார்.

அவர் சொன்னது எனக்கு பெரிய துக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. நான் அரசியலுக்கு வந்த 3 ஆண்டுகளில் யார் மீதும் அவதூறு வழக்கு கொடுத்ததில்லை. ஆர்.எஸ்.பாரதியின் பேச்சி எல்லையை தாண்டிச் சென்று விட்டது.
60 ஆண்டுகால அரசியலை பார்த்த ஆர்.எஸ்.பாரதி திமுகவின் காலம் முடிந்து விட்டது என்பது தெரிந்துகொண்ட பிறகு தான் இப்படிபட்ட அவதூறு பேச்சுக்கள் அவர் வாயில் வருகிறது. .
நீதி மன்றத்தில் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளோம். ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளோம் ஒரு கோடி ரூபாயையும் ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து பெற்று கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சியிலேயே ஒரு மறுவாழ்வு முகாம் அமைப்போம். இந்த வழக்கை கம்பீரமாக எடுத்து நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
ஆர்.எஸ்.பாரதி மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விசியத்தில் ஆர்.எஸ் பாரதியை நிச்சயம் சிறைக்க அனுப்புவோம். பெரிய பெரிய தலைவர்களை எல்லாம் சிறைக்கு அனுப்பியுள்ளேன்.. அண்ணாமலை சின்ன பையன் என்று எல்லாம் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
இதே சின்ன பையன் ஆர்.எஸ்.பாரதியின் ராசியான கைரேகையை என்ன செய்கிறான் என்று பாருங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்றும் தடையாக இருந்ததில்லை. தமிழக அரசு கேட்கும் விஷயங்களுக்கும் மத்திய அரசு தடையாக இருந்ததில்லை அப்படி தான் கலைஞரின் நினைவு நாணயத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
ஆனால் அனுமதி வழங்கிய இரண்டு நாட்களிலேயே மத்திய அரசு வஞ்சகம் செய்வதாகவும் தமிழக அரசு குற்றம் சாற்றுவார்கள் என தெரிவித்தார். ஆளும் கட்சி ஊழல் செய்து தமிழகம் வளராமல் இருப்பதற்கு மத்திய அரசு காரணம் இல்லை.
செல்வபெருந்தகை நீதிமன்றம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் எப்படி பட்டவர் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். இது போன்ற மனிதர்களை மக்களிடம் வெட்டவெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
இந்தியாவில் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவர் காங். கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது தமிழகத்தில் மட்டும் தான். நான் சண்டை போட்டால் தான் தமிழக அரசியல் திருந்தும் என்றால் அதற்கு என்னை அர்ப்பணிக்க தயார். என்ன வந்தாலும் சந்திக்க தயார் என தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ