டன்லப் தொழிற்சாலையில் பெண் சடலம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!
சென்னை அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த டன்லப் தொழிற்சாலை தற்போது உபயோக இல்லாமல் பழடைந்த நிலையில் உள்ளது. இந்த இடத்தில் பெண் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் இருப்பதாக அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இதில் முதற்கட்டமாக உயிரிழந்த பெண்ணிற்கு 35 வயது எனவும் இறந்து 2 நாட்கள் ஆன நிலையில் உடலில் பல காயங்களுடன் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அடுத்தகட்ட விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்