Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“பண்பாடுகள் பலவிதம்  அதில் பார்ஸிகள் தனிவிதம்..”  பார்ஸிகள் பற்றி  ஒரு சிறு பார்வை..!!

இரத்தன்ஜி தாதாபாய் டாடா ( 1856-1926) ஆர். டி. டாடா என சுருக்கமாக அழைக்கப்பட்டார். டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.

by logeshwari
October 12, 2024

“பண்பாடுகள் பலவிதம்  அதில் பார்ஸிகள் தனிவிதம்..”  பார்ஸிகள் பற்றி  ஒரு சிறு பார்வை..!!

 

 

 

 

இந்த  உலகத்தை  பொறுத்த வரையில்  ஒவ்வொரு  மக்களுக்கும்    ஒவ்வொரு.,  கடவுள்., மதம்.,  வழிபாடு., பண்பாடு   என  பல  உண்டு அந்த  வகையில்   பார்ஸிகள்  தனி  விதம்  என  சொல்லாம்..,   நான்  ஏன்  சொல்கிறேன்   இதை  முழுமையாக   படித்து  பாருங்கள்..

இன்று  ஈரான்  என  அழைக்கப்படும் பகுதி தான் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பாரசீகம் என்று அழைக்கப்பட்டது. மங்கோலிய செங்கிஸ்கான் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட   பல  குழுக்கள்,   பல  திசைகளில்   பயணம்  செய்ய  தொடங்கினர்..

அப்படி பயணம்  செய்துகொண்டே  குஜராத்தின் அன்றைய மன்னன் ஜாதவ் ராணாவிடம் குடியுரிமை கேட்டது. அவன் இங்கு குடியிருக்க இயலாது என மறுத்தான். அக்குழுவின் தலைவனுக்கு  பால்  அனுப்பி, நாங்கள் பால் போன்றவர்கள் இதில் உங்களால் எப்படி இணைய   முடியும்   எனக் கேட்டார்  மன்னன்.

பாரசீகத்திலிருந்து வந்த அக்குழுவின் தலைவனோ, பாலில் சிறிது சர்க்கரையை சேர்த்து, இப்படி  இணையலாமே   என  இவர்கள்    சொன்னனர்..  அதன்  பின்  குஜராத்தில் அக்குழுவினர் வந்து தங்கிவிட்டனர். இப்பவும் கூட  அவர்கள் தங்களை இந்தியர் என்று அழைத்துக் கொள்வதில்லை. பாரசீகத்திலிருந்து வந்ததால் “பார்ஸிகள்” என அழைக்கப்பட்டனர்.   இவர்கள்    ஜொராஷ்டிரம்    மதத்தை   சேர்ந்தவர்கள்..

ஜொராஸ்ட்ரிய மதம் ஜொராஸ்டார் என்ற ஞானியால் தோற்றுவிக்கப்பட்டது. ஜொராஸ்டார் இன்றைய  வடக்கு  ஈரானில்  பிறந்தவர்  என்கின்றனர்.  இவர்  தனது 40-வது வயதில் வட கிழக்கு  ஈரானிய  மன்னன்  விஷ்டாஸ்பா   என்பவரைச்  சந்தித்து, தனது மதக்கோட்பாடுகளை அவருக்கு விளக்கி, மன்னரை தனது சமயத்துக்கு மாற்றினார்.

அதன்  பின்னரே  ஜொராஷ்ட்ரிய மதம் நாட்டின் மதமாக வளர்ந்தது  என  சொல்லலாம்.  உலகில் ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். அவரது பெயர் ‘அஹூரா மாஜ்டா” என்கிறார் ஜொராஸ்டார்.  அதன்  பொருள் மெய் அறிவுகொண்ட கடவுள் என்பதாகும். கடவுளைப் போலவே இந்த  உலகில்  தீமையும் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அதன் வடிவம் அங்ராமைன்யு.

நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமே நமது வாழ்க்கை. அதற்கான போராட்டக் களம்தான் இந்த பூமி. இதில் நன்மை எது தீமை எது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியவன் மனிதனே என்பது அவரது கருத்து.

வெப்ப மண்டலப் பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு நீரின் முக்கியத்துவம் தெரியும். நீரைப் போற்றுவார்கள். குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் நெருப்பைப் போற்றுவார்கள். பார்ஸிகளின் வழிபாடு நெருப்போடு தொடர்புடையது.

அதன்  பின்னர்  கடந்த   1795ம்  பார்ஸியின் ஒரு சிறு கூட்டம் தமிழகத்திற்கு குடிபெயர  நினைத்து.,  சென்னை   ராயபுரத்தில் குடியேறியது. அங்கும் ஒரு நெருப்புக் கோவில் கட்டினார்கள்.  இன்று  வரை அந்தக் கோவிலிலும் ஈரானிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. என்பது  குறிப்பிடத்தக்கது.  இதுபோல   இந்தியா  முழுவதிலும்  1,50,000 பேர்   வாழ்கிறார்கள்.  சென்னையில்  மட்டும்   300 குடும்பங்கள்   வசிப்பதாக  ஒரு  புள்ளி  விவரம்   சொல்லுகிறது..

1885 ல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய தாதாபாய் நௌரோஜி முதல் தொழிலதிபர்கள் டாட்டா, வாடியா, கோத்ரெஜ் வரை பார்சிகள் தான். இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தியும் பார்ஸி தான். இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பார்ஸிகள் தான்.

ரத்தன் டாடா பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். பாரசீகத்திலிருந்து இங்கு வந்து குஜராத்தில் குடியேறிய இனம் என்பதால் பார்ஸி எனப் பெயர். பார்ஸி சமூகத்தின் நடைமுறை வித்தியாசமானது.

பார்ஸிகள் தங்கள் இனத்துக்குள்ளேயே மண உறவு கொள்ளக்கூடியவர்கள். பார்ஸி இனப்பெண்ணைத் தவிர வேறு சமயத்தைச் சேர்ந்தவரை மண உறவு கொள்ள அனுமதியில்லை. இது மிகவும் கண்டிப்பான உத்தரவு.

பார்ஸி ஆணோ, பெண்ணோ வேறு யாரையும் திருமணம் செய்தால், பார்ஸிகளின் வழிபாடு, சடங்குகள் மற்றும் சமூகத்திலிருந்தே முற்றிலும் விலக்கி வைக்கப்படுவார்கள். டாடா குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல.

டாடா வாரிசுகள் இவர்கள்.

1.   ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (1839 – 1904). டாடா நிறுவனத்தை நிறுவியவர். குஜராத் மாநிலத்திலுள்ள நவ்சாரி எனுமிடத்தில் பிறந்தவர். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே இவரது பெயர் சூட்டப்பட்டது.

2.    இரத்தன்ஜி தாதாபாய் டாடா ( 1856-1926) ஆர். டி. டாடா என சுருக்கமாக அழைக்கப்பட்டார். டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.

3.    நேவல் ஹார்முஜி டாடா (1904 -1989) இரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் வளர்ப்பு மகன்.

3.   ஜே. ஆர். டி. டாட்டா எனப் பரவலாக அறியப்படும் ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (1904 -1993). இந்திய விமானப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர்.

4.    ரத்தன் டாட்டா (1937-2024) தற்போது இறந்தவர். நேவல் ஹார்முஜி டாடாவின் மகன்.

ஆர். டி. டாடா எனும் 2 வதாக உள்ளவர் ஒரு பிரெஞ்சு கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். இதை பார்ஸி சமூகம் ஏற்கவில்லை. அப்பெண்ணை பார்ஸியாக மதம் மாற்ற ஏற்பாடு செய்தார் ஆர். டி. டாடா. அதையும் பார்ஸிகள் ஏற்கவில்லை.

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆர். டி. டாடா. பார்ஸிகள் சார்பாக பார்ஸி பஞ்சாயத்து எனும் அமைப்பு வாதிட்டது. ஆர். டி. டாடாவிற்கு எதிராக நீதிமன்றம் அப்போது தீர்ப்பு கூறியது. எனவே ஆர். டி. டாடாவின் குடும்பத்தை பார்ஸிகள் ஒதுக்கி வைத்தனர்.

எனவே தான் தற்போது இறந்த ரத்தன் டாடாவின் தந்தையான நேவல் ஹார்முஜி டாடாவை வளர்ப்பு மகனாக அறிவித்தார். ஆர். டி. டாடா.

பார்ஸிகள் இறந்த உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. கழுகுக்கு இரை யாக வைக்கிறார்கள். இறந்த உடலை கொண்டு போய் வைக்கும் கட்டிடத்திற்கு “டாக்மா” அல்லது “டவர் ஆப் சைலன்ஸ்” எனப்பெயர். இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் இதுதான்.

புதைத்தால் மண் மாசுபடும். எரித்தால் காற்று மாசுபடும். நதியில் உடலை விட்டால் நீர் மாசுபடும். பூமியை மாசுபடுத்தக்கூடாது என்பதால் கழுகுக்கு உணவாகத் தந்துவிடுகிறோம் என்கிறார்கள். ஆனால் இது பாலைவனம் வழியாக அலைந்து திரியும் நாடோடிகளின் பழமையான பாலைவனச் சடங்கு என்பதே மானுடவியலாளர்களின் கருத்து.

இறந்தவரின் உடலை வெள்ளைத் துணியால் சுற்றிய பிறகு அதை யாரும் தொடக்கூடாது. உடலை வெளியே எடுத்து வரும் போது ஒரு நாய் பார்க்கவேண்டும். நாய் மரணத்தின் தூதுவன் என்பது பார்ஸிகளின் நம்பிக்கை. அதன் பிறகு உடலை உயர்ந்த கட்டிடமாக உள்ள “டவர் ஆப் சைலன்ஸ்”-ல் வைப்பார்கள்.

மும்பையில் பார்ஸிகளின் இறந்த உடலை வைக்கும் “டவர் ஆப் சைலன்ஸ்” ஒன்று உள்ளது. இறுதிச்சடங்கு செய்பவர்கள் என பார்ஸிகளுக்குள் வெளி உலகத் தொடர்பில்லாத சிலர் உள்ளனர். அவர்களே இதைச் செய்கிறார்கள்.

“டவர் ஆப் சைலன்ஸ்”ஸில் வைத்த பிறகு கழுகுகள் தின்றது போக மீதத்தை அகற்றி விடுவார்கள். ஒரு ஆண்டுகள் உடல் அங்கேயே இருக்கும். விரைவில் உடல் அழிய இப்போது சூரியக் கண்ணாடி பயன்படுத்துகிறார்கள்.

பார்ஸிகள் பார்ப்பனியப் பண்பாட்டு முறைகளை எப்போதும் ஏற்பதில்லை என்பது தனி வரலாறு.

Tags: Parsisஉண்மை கதைகள்நிஜக்கதைகள்பார்ஸிகள்பார்ஸிகள் பண்பாடுகள்
ADVERTISEMENT

Related Posts

நிஜக்கதைகள்

அரசு பியூன் வேலைக்கு 4வது படித்திருந்தால் போதுமா..!!  

நிஜக்கதைகள்

“மழை நீர்” அந்த காலம் முதல் இந்த காலம் வரை..!

நிஜக்கதைகள்

பெண் பார்த்தல்.. வரன்.. குட்டிஸ்டோரி..!

Next Post
MADHIMUGAM

தோஷங்களும்   பரிகாரங்களும்..!!  தோஷங்கள்  நீங்க  இதை  செய்ய  மறக்காதீங்க..!!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.