அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடன் மற்றும் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய விவரங்களை வெளியிட்டுவருகின்றன.
அதன்படி, அதானி குழும நிறுவனங்களின் மொத்த கடன் தொகையான 2 லட்சம் கோடி ரூபாயில் எஸ்.பி.ஐ அளித்த கடன் தொகை 21 ஆயிரத்து 375 கோடி ரூபாய், இண்டஸ் இண்ட் வங்கி 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் வங்கி 7 ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தமாக அதானி குழுமத்துக்கு முன்னணி வங்கிகள் 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது