சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சன்னதி தெருவில் நாட்டு வெடிகுண்டை போலவே கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் முன்புள்ள சன்னதி வீதியில் நாட்டு வெடிகுண்டை போலவே உருவம் உள்ள மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது, இதனையடுத்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்.
அதனை தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் போட்டு பின்பு, பட்டாசு தொழிற்சாலை தொழில்நுட்ப நிபுணர்களை அழைத்து அதனை காண்பித்து விளக்கம் கேட்டனர், அப்போது இது பேன்சி ரக பட்டாசு பாகம் என உறுதிப்படுத்தப்பட்டது.
இன்று சுபமுகூர்த்த தினம்என்பதால் கோவிலில் நடைபெறும் திருமணநிகழ்ச்சிக்காக ஒவ்வொரு மணமக்களும் குழுவினராக கோவிலுக்கு வந்து சென்றனர். அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் பைப் பேன்சி ரக பட்டாசு ஒன்றின் பாகம் பார்ப்பதற்கு நாட்டு வெடிகுண்டு போலவே இருந்ததுதெரியவந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது போனசி ரக பட்டாசின் பாகம் என உறுதிப்படுத்தப்பட்ட பின்பே காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் அந்தப் பொருளை பக்கெட்டுடன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எடுத்துசென்று ஆய்வு செய்ய உள்ளனர்.