மணிப்பூர் கொடூரம் கண்டித்து ஜூலை 26ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!!
மணிப்பூர் மாநில அரசை கண்டித்து அம்மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தரும் வகையிலும் வருகிற ஜூலை 26ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 7மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் “கே.எஸ்.அழகிரி” கூறியுள்ளார்.
அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்தே தீ பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் பெருபான்மையான் மக்கள் வாழ்கின்றனர். மைதேயி மக்களும், குகி பழங்குடியின மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மணிப்பூர் மாநிலம் கலவரமாக மாறியது.., மேலும் தொடர் வன்முறையால் வீடுகள் தீ வைப்பு மற்றும் 120க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் அதில் தீ வைக்கப்பட்டன.
74 நாட்களுக்கு முன் மே 4ம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கும்பல் குகி இன மக்களை ஆயுதத்துடன் தாக்கி வன்முறையை ஏற்படுத்தியுள்ளது, அது மட்டுமின்றி இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி பெண்களை ஊரவலமாக அழைத்து சென்று கூட்டு பாலியல் பலத்தகாரம் செய்து அதை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர்.., அந்த சம்பவம் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது.
இந்த கலவரத்திற்கு மத்திய மாநில பாஜக அரசு தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.., மணிப்பூரில் தீ பற்றி ஏறிய ஆரம்பித்து 75 நாட்கள் எதுவும் பேசாத பிரதமர் மோடி இந்த முறை மணிப்பூர் கலவரம் குறித்து முதல் முறையாக 8 நிமிடங்கள் பேசியிருக்கிறார் . அதில் மணிப்பூர் பற்றி 36 வினாடிகள் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை மறைத்து எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநில குற்றங்களோடு சமம் செய்து மணிப்பூரில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து மறைத்து இருக்கின்றனர்.
இந்த சம்பவம் இந்தியாவிற்கு ஏற்பட்ட பெரும் அவமானம் இதுகுறித்து உச்சு நீதிமன்றம் “மணிப்பூர் சம்பவத்தை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்தவில்லை என்றால் நாங்களே நேரடியாக செயப்படுவோம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் எழுப்பும் மணிப்பூர் சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பிரதமர் மோடி 8 நிமிடம் பேசி இருக்கிறார் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் வன்முறைகளை தடுக்க மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு கூறும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 26ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழகத்தில் இருக்கும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.
மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்காமல் தப்ப முடியாது.., மணிப்பூரில் ஏற்பட்ட சம்பவத்தை பொருட் படுத்தாமல் செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு பாடம் புகட்டுவதற்காகவே ஜூலை 26ம் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்துவோம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.