Wednesday, December 3, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்..!! செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை..!!

தமிழக  மக்களால்  ஏற்றுக் கொள்ளாத  மும்மொழி திட்டம்,  புதிய கல்விக் கொள்கை, சனாதன தர்மம் தான் நம்., பாரதத்தை உருவாக்கியது மற்றும் ஜியூ போப்பின் திருக்குறள் மொழி பெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல் இருக்கிறது..

by logeshwari
August 13, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்..!! செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை..!!

 

 

 

 

சுதந்திர   தினத்தையொட்டி  ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ்  கட்சி  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர  தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருப்பதாகவும் அவரது   அழைப்பிற்கு   நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்..

தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு :

தமிழக  மக்களின்  ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை  தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது.  இதன்மூலம்  தமிழகத்தின்  உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிற செயலை தொடர்ந்து செய்து வருகிறார். இவரது பேச்சுகளாலும், நடவடிக்கைகளாலும் எழுந்த சர்ச்சைகளை போல இதற்கு முன்பு எந்த ஆளுநர் மீதும் எழுந்ததில்லை.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163-ன்படி தமிழக அமைச்சரவையின் உதவியுடனும், அறிவுரையின்படியும் தான் மாநில ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் தமிழக அமைச்சரவையின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்துகிற போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

 

மசோதாக்களுக்கு ஒப்புதல் :

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 12-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடித்து வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி ஒன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது அவரது கருத்தை கூறி சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்ப வேண்டும்.

சட்ட உறுப்பு 200 :

அதற்கு  பிறகு  தமிழக  சட்டப்பேரவை  அரசமைப்புச்  சட்ட உறுப்பு 200-ன்படி திரும்பவும் அந்த மசோதாவை திருத்தத்துடனோ அல்லது திருத்தம் இல்லாமலே நிறைவேற்றி திரும்ப ஆளுநருக்கு அனுப்பினால்  அதற்கு  ஒப்புதல் வழங்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளித்த தீர்ப்பில் ஆளுநருக்கு   சம்மட்டி   அடி   கொடுக்கிற   வகையில்   தெளிவான தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பில் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்..? அரசமைப்பு சட்டப்படி செயல்படாமல் இருப்பதற்கு  அவருக்கு  யார் அதிகாரம் அளித்தார்கள்..?  இதன்மூலம்  உச்சநீதிமன்ற  தீர்ப்பை அவமதிக்கிறார். அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு தெரியுமா..? தெரியாதா..? உச்சநீதிமன்றத்தோடு  விளையாட வேண்டாம் என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

 

அமைச்சர் பொன்முடி மீதான தண்டனை :

அதேபோல,  அமைச்சர்  பொன்முடி  மீதான  தண்டனையை  உச்சநீதிமன்றம்  நிறுத்தி  வைத்த பிறகு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். ஆனால், ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்காமல்  சண்டித்தனம்  செய்தார். இதற்கு பிறகு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெறப்பட்ட  ஆணையின் படி  பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஆளுநருக்கு ஏற்பட்டது.

இதற்கு பிறகும் அவர் பாடம் கற்றதாக தெரியவில்லை. இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தமிழக ஆளுநர் தாம் வகிக்கிற பதவியின் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், விரோத போக்கோடும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக  வன்மையாக  கண்டிக்கிறேன்.

நீட் விலக்கு மசோதா :

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா கிராமப்புற மக்களுக்கு எதிரானது என மசோதாவை மறுபரிசீலனை செய்வதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது..  மசோதாவை நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் பொருள் என்று புதிய வியாக்யானம் கூறுவது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.

தமிழக  மக்களால்  ஏற்றுக் கொள்ளாத  மும்மொழி திட்டம்,  புதிய கல்விக் கொள்கை, சனாதன தர்மம் தான் நம்., பாரதத்தை உருவாக்கியது மற்றும் ஜியூ போப்பின் திருக்குறள் மொழி பெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல் இருக்கிறது என்றும், திருவள்ளுவர் ஒரு ஆன்மீகவாதி என்று மதச்சாயம் பூசுவது என்று தமிழர்களின் உணர்வுகளுக்கு விரோதமாக ஆணவத்தோடும்,   அதிகார   மமதையோடும் கருத்து கூறியவர் ஆளுநர் ஆர்.என். ரவி.

 

 

துணை வேந்தர் நியமனம் :

தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிப்பதில் தமிழக அரசின் பரிந்துரையை புறக்கணித்து ஆளுநர் தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்து செயல்பட்டு வருகிறார். இதனால் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல்  நிர்வாகம்  முடங்கிக்  கிடக்கிறது.  சென்னை  உள்ளிட்ட நான்கு பல்கலைக்  கழகங்களில்  துணை  வேந்தர்கள் நியமிக்கப்படாமல் பல மாதங்களாக காலியாக  இருக்கிறது.

இந்நிலையில் 20-க்கும்  மேற்பட்ட  பல்கலைக்  கழகங்களில்  துணை வேந்தர்களை  நியமிக்கும் வகையில்  சட்டப்பேரவை  நிறைவேற்றிய  மசோதாவிற்கு  ஒப்புதல் கொடுக்காமல் எதேச்சதிகாரமாக செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் உயர்கல்வித்துறையை  சீரழித்து  வருகிறார்.

பாஜக ஊதுகுழல் :

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசின் செயல்பாடுகளை முடக்கி, வளர்ச்சியை பாதித்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் பதவிக் காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது. அவரை மீண்டும் ஆளுநராக  நியமிக்கக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்.

இந்நிலையில்  தமிழக  மக்களின்  ஒட்டுமொத்த  எதிர்ப்பை  பதிவு  செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைக் குரலை  ஓங்கி   ஒலிக்கிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

Tags: #Madhimugam#Madhimugam NewsGovernor RN Raviselvaperunthakaiஆளுநர் ஆர்.என்.ரவிகாங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைசுதந்திர தினம்சுதந்திர தினத்தில் ஆளுநர் தேநீர் விருந்துசெல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post
MADHIMUGAM NEWS

சவுக்கு சங்கர் மீது மீண்டும் வழக்கு பதிவு..!! அதிரடி ஆக்சனில் இறங்கிய போலீஸ்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.