பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டிஸ் வழங்கிய காங்கிரஸ்..!!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீசை காங்கிரஸ் சமர்ப்பித்துள்ளது. மக்களவையில் இன்று ஒன்றிய அரசிற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சமர்ப்பித்துள்ளது.
மக்களவையின் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை மக்களவை செயலகத்தில் கவுரவ் கோயக் வழங்கியுள்ளார். காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானதுக்கு திமுக ஆதரவு தர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோயின் மகன் கவுரவ் கோகோய்.., மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். நாடாளுமன்றம் 4 நாட்களாக முடங்கி இருப்பதாகவும், பிரதமர் மோடி பேசாமல் இருப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததே பிரதமர் மோடியை பேச வைப்பதற்காக தான் என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்களவையில் 50 உறுப்பினர்களின் ஆதரவு தெரிவித்தவுடன் தீர்மானம் விவாதம் செய்யப்பட்டு பட்டியலிடப்படும்.., சபா நாயக்கர் இதை புரிந்துக்கொள்வார் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுக்காமல் இருப்பதால் இந்த நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் முடிவாக எடுக்கப்பட்டது என காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.