உத்தரப்பிரதேச சாமியார் மீது திமுக தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பார்த்து அயோத்தியில் சாமியார் உருவத்தில் நடமாடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு ரவுடி உதயநிதி ஸ்டாலின் தலையை துண்டாடினால் பத்து கோடி ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார் அந்த சாமியார் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அவர்களை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம். எப்படியாவது உதயநிதி ஸ்டாலின் அவர்களை அச்சுறுத்தி விட்டால் அவருடைய பணி முடங்கிவிடும் அவருடைய வேகம் குறைந்துவிடும் என்று பைத்தியக்காரத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் மகராஷ்டிரா மாநிலத்தின் அமைச்சர் மன்னிப்பு கேட்காவிட்டால் உதயநிதி ஸ்டாலினை மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய அமைச்சர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதையும் கமிஷனர் அலுவலகத்தில் நாங்கள் மனுவாக கொடுத்திருக்கிறோம்.
கண்டிப்பாக அந்த சாமியார் மீதும் அந்த மாண்புமிகு அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா மீது நடவடிக்கை பாயும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கிறது. யாசகம் எடுத்து சாப்பிடக்கூடிய ஒரு சாமியாருக்கு 10 கோடி எப்படி கிடைக்கும் என்று சொன்னால் அது சாமியாருடைய பணமாக எங்களுக்கு தெரியவில்லை. ஒன்று மோடி சொல்லி இருக்க வேண்டும் அல்லது அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கக்கூடிய யோகி ஆதித்யா சொல்லி இருக்க வேண்டும். இதுதான் அவர்களுடைய பின்புறம் இல்லாமல் அவர்கள் சொல்லாமல் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் மங்கள் பிரபாத் லூதா சொல்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும், எனவே உத்திர பிரதேச சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.