காஞ்சிபுரம் விப்பேடு கிராம பகுதியை ஒட்டி வந்தவாசி – கீழம்பி புறவழிச்சாலையில், தனியார் கல்லூரியில் படித்து வந்த காதலர்கள், அப்பகுதியில் பள்ளி அருகே உள்ள காலி வீட்டுமனை பகுதி சென்று பேசிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு வந்த மது அருந்திய நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களைக் கண்டதும் மது போதையில் காதலனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி அப்பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் மாஸ்க் அணிந்திருந்ததால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும், இருப்பினும், சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் விமல், என்ற பெயரை அடிக்கடி உச்சரித்ததாக காதலன் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், அப்பகுதியில் இருந்த விமல் என்ற நபரைத் தேடிய காவல் துறையினர் அவனை அதிரடியாக கைது செய்து, விமல் அளித்த தகவலின்பேரில் மற்ற மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.