கோவை ஈஷா மையம் பாலியல் விவாகரம்..! சுப்ரீம் கோர்ட் விதித்த தடை..!!
கோவை ஈஷா யோகா மையத்தில் காவலர்கள் விசாரணை செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது..
சிவன் கோவில்களில் புனித தளங்களில் ஒன்றாக விளங்கும் கோவை “ஈஷா மையம்” களங்கம் உற்று இருப்பதாக ஒரு செய்தி வைராலக பரவி வருகிறது.. அதாவது கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளியை சேர்ந்த காமராஜ் (வயது 69) ஈஷா மையத்தில் உள்ள தனது இரு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்வதாகவும்., துன்புறுத்துவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்..
ஆனால் அந்த புகார் ஆனது ஏற்றுக்கொள்ளப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருதார்., அந்த மனுவில் அவர் குறிப்பிடிருப்பதாவது “ஈஷா யோகா மையத்தில் உள்ள தன்னுடைய இரண்டு மகள்களையும், அவர்கள் சித்திரவதை செய்கிறார்கள்., எனது மகள்களை உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, அந்த ஆட்கொணர்வு மனுவில் குறிபிட்டுள்ளார்.
இதனை விசாரணை செய்த நீதிபதிகள், கோவை மாவட்ட காவல்துறையினருக்கு ஈசா மையத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டிருந்தனர்.
அதனையடுத்து, கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறையினர் மாவட்ட அலுவலர் அம்பிகா ஆகியோர் தலைமையிலான குழுவினர் மற்றும் ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் என அனைவரிடம் விசாரணை செய்யப்பட்டது..
ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உதவிற்கு டெல்லி உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது ஒரு புனிதமான திருத்லதிற்குள் ராணுவத்தையோ, காவலர்களையோ விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது
ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் பெண் துறவிகளுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் காணொலி மூலம் விசாரணை செய்த பின்னரே முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.