பயணிகளுடன் புறப்பட்ட மாநகர பேருந்து.. திடீரென பற்றிய தீ.. பரபரப்பில் பயணிகள்..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு மெட்ரோ போக்குவரத்துக் கழகத்தால் 144ஈ வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து இன்று காலை 9 மணியளவில் மாநகரின் எம்.ஜி. சாலையில் பயணிகளுடன் அனில் கும்ப்ளே வளைவுப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் திடீரென தீப்பிடித்தது.
பேருந்தின் முன்பக்கத்திலிருந்து புகை வருவதைக் கண்ட பயணிகள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக வாகனத்தை விட்டுக் கீழே இறங்கினர்.
இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. அந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணித்த நிலையில் அவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அரசுப்பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்