2020ம் ஆண்டு சீனாவின் சாங்கே – 5 விண்கலம் நிலாவில் இருந்து கல், மண் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது. முதல் முறையாக நிலாவில் மண் மாதிரிகளை சேகரித்ததோடு, அது சம்பந்தமான ஆய்வுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது நிலாவில் குடியிருப்புகளை அமைப்பது தொடர்பான அட்வான்ஸ் சோதனையை தொடங்கியுள்ளது. இதற்காக “சேஞ்ச் 8 மிஷன்” என்ற ஆய்வை சீனா தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் நிலாவில் கட்டிடங்களை கட்ட 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் நிலாவில் உள்ள மண்ணைப் பயன்படுத்தி செங்கல் தயாரிக்கும் பணிக்காக ரோபோக்களை அனுப்ப உள்ளது. இத்திட்டம் 2030ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என சைனிஸ் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலாவில் நடத்தப்படும் ஆய்வில் அடுத்த 5 ஆண்டுகளில் சீனா முன்னணியில் இருக்கும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், 2030ம் ஆண்டு நிலாவிற்கு நேரடியாக விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post