கோவில் பேனர் வைத்த சிறுவர்கள்.. மின்சாரம் தாக்கிய சோகம்..!
திருவாரூர், கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகன் மதன்ராஜ் (வயது 15) இவர் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் ஆனி மாத திருவிழா நடைபெற இருப்பதால் மதன்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ரூபன், சஞ்சய், சித்தார்த்தன் ஆகியோர் கோவில் அருகே பேனர் வைத்தனர்.
அப்போது பேனர் மீது மின் கம்பி உரசியதில் நான்கு பேர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நான்கு பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மதன்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்