உலக முதலீட்டாளர்கள் ரூ.5.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டம்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் ஜனவரி 7, 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
தொழில்துறை, ஆட்டோமொபைல், எரிசக்தித்துறை, தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன.
அதேபோல், சுகாதாரம், வீட்டு வசதித்துறை, கைத்தறித்துறை, சுற்றுலா துறைகளிலும் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், எரிசக்தித்துறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்து அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியை பள்ளி, கல்லூரிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.