தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அண்ணாமலைக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணை வந்த நிலையில், எட்டு வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Discussion about this post