பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா-மண்ணிவாக்கம்
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சரவணன் பெரியசாமி தலைமை வகித்தார்.
விழாவிற்கு சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் இராவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய, இராவணன் , கல்லூரி மாணவர்களுக்காக நான் முதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற மூன்று முத்தான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)