சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ள நகை வாங்க காத்திருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று சென்னையில் (மார்ச்.14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 5,390 ரூபாயாகவும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 43,160 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் கிராம் ஒன்றிற்கு 65 ரூபாய் அதிகரித்து 5,752 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 46,016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 2 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து 72 ரூபாய்க்கும், ஒரு கிலோவிற்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.
டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக சரிந்து தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.