மெரினா கடலில் குளிக்க சென்று அலையில் சிக்கிய பள்ளி மாணவனின் உடல் மீட்பு
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் அருள்(15). 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் பயிலும் யோகேஸ்வரன்(14) மற்றும் தர்ஷன்(10) ஆகிய இருவருடன் மெரினா கடற்கரைக்கு சென்று நண்பர்கள் மூவரும் கடலில் விளையாடி உள்ளனர்,
அப்போது கடல் சீற்றம் அதிகரித்த நிலையில் மூவரையும் இழித்துச் சென்ற நிலையில் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்து தர்ஷன் மற்றும் யோகேஸ்வரனே வீட்டில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
அருளை கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடி வந்த நிலையில் மெரினா கடலில் அருளின் உடல் மிதப்பதை கண்ட கடலோர காவல் படையினர் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்