60 கோடியும் சங்கரின் காதலியும்..!! குண்டாசில் சிக்கிய கஞ்சா..!! கோவை நீதிமன்ற உத்தரவு..!!
செய்தி சுருக்கம் :
தற்போது கஞ்சா வழக்கு, பெண் காவலரை அவ தூராக பேசிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி உத்தரவு :
தற்போது நீதிமன்ற காவலில் உள்ள சவுக்கு சங்கர் காவல்துறையினரால் துன்புறுத்தப் பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் தரப்பில் இன்று நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து காவல்துறையினரின் விசாரணையின் போது 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வழக்கறிஞரை சவுக்கு சங்கர் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதாவது போலீசார் நடத்திய விசாரணையின் போது 3 மணி நேரங்களுக்கு ஒருமுறை, ஒரு சில நிமிடங்கள் மட்டும் சவுக்கு சங்கரை அவரின் வழக்கறிஞர் சந்திக்க முடியும் என்ற படி உத்தரவிட்டுள்ளார்..
மருத்துவ பரிசோதனை :
குண்டாஸ் பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் இன்று மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார். சவுக்கு சங்கருக்கு வலது கையில் மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்..
அதன் பின் கோவை சிறையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக முழக்கம் போட்டார்.
மீண்டும் வலது கையில் மாவு கட்டு போட்டு அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்யப்பட்டது.
இந்த முடிவுகள் கோர்ட் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டது..
குண்டாஸ் வழக்கு :
ஏற்கனவே யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டம் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து. அவரது வீடுகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது குண்டாஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் காவல்துறையினர் அது தொடர்பான ஆவணங்களை கோவை போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
போலீஸ் சோதனை :
அதன் பின் சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை முதல் தேனி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த சோதனையின் முடிவில் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர் மேலும் அவரது ஆவணங்கள் கைப்பற்றப்படுள்ளது.
அவர் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் யு டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போலீசார் வெளியிட்ட அறிக்கை :
இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில். சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் (எ) சவுக்கு சங்கர். 1/48, த/பெ.ஆச்சிமுத்து, மதுரவாயல், சென்னை என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு. தற்போது கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவர்கள் சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை. கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று (12.05.2024) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.