மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, பெரியகருப்பன், ஆகியோர் நிவாரண பொருட்கள் வழங்கினர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 பகுதிகளில் உள்ள 45 மற்றும் 36 வார்டுகளில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
வியாசர்பாடி கணேசபுர பகுதி மற்றும் பெரம்பூர் தொகுதியில் 45 வது வட்டத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் 45-வது வட்ட திமுக செயலாளர் கே. தினகரன், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், மாமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோரும் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
இதில், 5-கிலோ அரிசி, ரவை பாக்கெட்டுகள், சேலை, லுங்கிகள், போர்வைகள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)