நீட்தேர்வை திணிக்கும் பாஜக..! பதிலடி கொடுத்த உதயநிதி..!
மாணவர்களின் உயிரை பறித்து கொண்டு இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் கொடுத்துள்ளனர், அந்த கோரிக்கையை வெறும் கடிதமாக பார்த்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்து திமுக சார்பில், தி.மு.கழகத்தின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலை நகரங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் கழக மாநிலங்களிலும் நாளை (20-08-2023 – ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருப்பதால் இந்த உண்ணாவிரத அறப்போரில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ மாணவியர்கள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், மற்றும் சமூகச் செயல் பாட்டாளர்கள், கலந்து கொள்ள இருகின்றர்னர்.
இந்நிலையில் பாஜக ஒன்றிய அரசு நீட் தேர்வை நீக்கம் செய்வது முடியாத ஒன்று.., என தெரிந்து திமுக மாணவர்கள் முன் நாடகமாடி கொண்டு இருக்கிறது.., அந்த நாடகத்தின் அரங்கேற்றம் தான்.., நாளை நடக்க இருக்கும் உண்ணாவிரதம், என பாஜக ஆளுநர் கூறியுள்ளார்.
அதற்கு அமைச்சர் உதயநிதி இதற்கு முன் நீங்கள் நடத்தி வரும் நாடகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் இந்த போராட்டம் உங்களுக்கு நாடகமாக தான் தெரியும்.., காரணாம் இதுவரை நீங்கள் நடத்தப்பட்ட நாடகம் அரங்கேறும் நேரும் வந்துவிட்டது. என பதிலடி கொடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தன்னார்வலர்களும், பொது மக்களும் தங்களின் மேலான கருத்துகளை எடுத்துரைப் பார்கள்.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை உள்ளிட்ட கழகங்களின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.