பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடும் பிப்லான்ட்ரி கிராமம்..!!
பெண்குழந்தை பிறந்தால் இன்றும் ஒரு சிலர் வரமாக நினைக்காமல் சாபமாக நினைக்கின்றார்கள். ஒரு சிலர் கள்ளிப்பால் ஊற்றி கொள்ளுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.., என்னதான் பெண் குழந்தை இருந்தாலும் ஆண் பிள்ளைக்கு நிகர் இல்லை என்று சொல்லுபவர்களும் உண்டு.
இப்படி இருப்பவர்களுக்கு மத்தியில்.., பெண் குழந்தை பிறப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும். பெண்களை வணங்கும் ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால்.. நம்மால் நம்ப முடியுமா..? நம்புங்கள் அப்படி ஒரு கிராமம் இருக்கிறது.
ராஜஸ்தானில் ஓர் கிராமம் பிப்லான்ட்ரி. அங்கே ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது 111 மரக்கன்றுகளை நட்டு வைக்கிறார்கள். மரத்துடன் சேர்ந்து குழந்தையும் வளர்கிறது. இப்படி நட்டு வைக்கப்பட்ட மூன்று லட்சம் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. வேம்பு, மாங்காய், நெல்லி மரங்களைத்தான் நடுகின்றனர்.
இதுபோக கிராம மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து 21 ஆயிரம் ரூபாயை பெண் குழந்தையின் பெற்றோருக்கு நன்கொடையாகத் தருகின்றனர். நன்கொடை பணத்தில் 10 ஆயிரம் ரூபாயைத் திருப்பி வாங்கி குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்கின்றனர். குழந்தைக்கு 20 வயதாகும் வரை அந்தப் பணத்தை எடுக்கக்கூடாது என்பது விதி.
அது அவர்கள் வளர்ந்த பின் அவர்களின் கல்விக்கு பெரிதும் உதவும்.. என்றும் கூறுகின்றனர். இந்த அனைத்து செயல்முறைகளையும் கிராம பஞ்சாயத்து கவனிக்கிறது. இந்த கிராமத்தில் இவர்கள் செய்யும் செயல்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
முக்கியமாக திருமணம் செய்து வைக்கும் பொழுது அவர்கள் விருப்பம் வின்றி திருமணம் செய்து வைக்க மாட்டார்களாம், மகள்கள் விருப்பட்டால் கூட விருப்பப்படும் ஆணுடனே திருமணம் செய்து வைத்து விடுவார்களாம்.
பெண் குழந்தையைக் கொண்டாடும் பிப்லான்ட்ரி உலகிற்கே முன் உதாரணமாகத் திகழ்கிறது. பிப்லான்ட்ரி கிராமத்தின் தலைவராக இருந்த ஷ்யாம் சுந்தர் இந்தத் திட்டத்தை தன் மகளின் நினைவாகத் தொடங்கினார். ஒரே மகள் நோயால் இருந்து விட்டதால்.., மகளின் இறப்பிற்கு பின் இந்த நற்செயலை தொடங்கியுள்ளார். அன்று முதல் இன்று வரை அந்த கிராமத்தின் வழக்கமாக இது திகழ்கிறது.