பாகிஸ்தானில் இருந்து தனி நாடாக உதயமாக பலூசிஸ்தான் விடுதலைப்படையினர் போராடி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தினரையும் தாக்கியும் கொன்றும் வருகிறது பலூச் விடுதலைப்படையினர். இந்த தருணத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் மூண்டுள்ளதால் பலூச் படையினர் இறங்கி அடிக்க தொடங்கியுள்ளனர். நேற்று பாகிஸ்தான் போர் வீரர்கள் 14 பேரை பலூங்ச படையினர் கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில், குவாட்டாவிலுள்ள 100 இயற்கை எண்ணெய் கிணறுகளை பலூச் படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ்தான் விடுதலை பெற்றுள்ளதாகவும் பலூசிஸ்தானுக்கு ஐ.நா அமைப்பின் அமைதிப்படையை அனுப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தங்களுக்கு தூதரகத்தை திறக்க அனுமதிக்கும்படி பலூசிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் பலூச் அமைப்பு பலூசிஸ்தானில் இடைக்கால அரசை அமைக்கும். சுதந்திர தின விழாவுக்கு நட்பு நாடானா இந்திய தலைவர்களை அழைப்போம். இங்கிருந்து, பாகிஸ்தான் வீரர்கள், ஐ,எஸ்.ஐ அமைப்பினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தனிலேயே பெரிய மாகாணம் பலூசிஸ்தான். அந்த நாட்டின் நிலப்பரப்பில் 44 சதவிகிதம் இந்த மாகாணத்தினுடையது. மக்கள் தொகையை மற்ற மாகாணங்களை விட குறைவானது. ஏராளமான கனிம வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த மாகாணத்தில் இந்து திராவிட கலாசாரங்களும் பரவலாக காணப்படுகிறது.